sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விபத்தில் இறந்த வீரர் குடும்பத்திற்கு பி.சி.சி.ஐ., நிதியுதவி தேவை: மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியினர் கோரிக்கை

/

விபத்தில் இறந்த வீரர் குடும்பத்திற்கு பி.சி.சி.ஐ., நிதியுதவி தேவை: மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியினர் கோரிக்கை

விபத்தில் இறந்த வீரர் குடும்பத்திற்கு பி.சி.சி.ஐ., நிதியுதவி தேவை: மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியினர் கோரிக்கை

விபத்தில் இறந்த வீரர் குடும்பத்திற்கு பி.சி.சி.ஐ., நிதியுதவி தேவை: மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியினர் கோரிக்கை


ADDED : மார் 29, 2024 06:15 AM

Google News

ADDED : மார் 29, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

​மதுரை : மாற்றுத்திறனாளிகள் தமிழக கிரிக்கெட் வீரர் மணிகண்டன் 27, விபத்தில் இறந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு பி.சி.சி.ஐ., நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:

நாமக்கல் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மணிகண்டன் 27, ஏழாண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு டூவீலரில் செல்லும் போது வலிப்பு ஏற்பட்டு மரத்தில் மோதினார்.

நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

கடந்த மாதம் தான் அவருக்கு திருமணம் நடந்தது. ஐ.பி.எல்., அல்லது டி.என்.பி.எல்., கிரிக்கெட் வீரர் விபத்தில் இறந்திருந்தால் பி.சி.சி.ஐ., எந்தமாதிரி உதவி செய்யுமோ அதுபோல மணிகண்டன் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும். தமிழக அரசும் நிதியுதவி வழங்க வேண்டும்.

இந்திய அணிக்காக, தமிழகத்திற்காக கிரிக்கெட் விளையாடும் எங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வை பி.சி.சி.ஐ. உறுதி செய்ய வேண்டும். எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us