ADDED : செப் 16, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் பா.ஜ.,சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை மத்திய இணை அமைச்சர் முருகன் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்யை வழங்கி பேசினார்.
அதில், 'தமிழகத்தில் பா.ஜ., வுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை என்ற இலக்கோடு செப்.2 ல் பிரதமர் மோடி துவக்கி வைத்த நிலையில் பா.ஜ., வினர் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.
முகாமில் கலந்து கொண்ட பெண்களிடம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கும் பணி குறித்து அமைச்சர் முருகன் கேட்டார். இதில் மாவட்ட தலைவர் ராஜசிம்மன், செயலாளர் கண்ணன், நகர் தலைவர் சேவுகமூர்த்தி, நிர்வாகி தர்மலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.