/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மோசடி நிதிநிறுவனங்கள் புகார் கூற அழைப்பு
/
மோசடி நிதிநிறுவனங்கள் புகார் கூற அழைப்பு
ADDED : செப் 15, 2024 01:01 AM
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் முதல் தெருவில் ரெய்சர் பசுமை டெவலப்மென்ட் லிட்., நிதி நிறுவனத்தை ராஜேந்திரன், இயக்குநர்களாக சிவகுமார், ராமச்சந்திரன், சுந்தரம், ஜான், குணசீலன், ராஜா ஆகியோர் சேர்ந்து நடத்தினர். பண முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் எனக்கூறி ரூ.பல கோடி வரை மக்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்தனர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிதிநிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் அசல் ஆவணங்களுடன் தபால் தந்தி நகர் சங்கரபாண்டியன் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0452 - 264 2161ல் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல் மதுரை வடக்குபெருமாள் மேஸ்திரி வீதியில் அதிர்ஷ்டம் பார்ம் அலைடு லிட்., என்ற நிதிநிறுவனத்தை நடத்தி ஜெயகுமார், மனைவி வெண்ணிலா மற்றும் சாந்தி ஆகியோர் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிதிநிறுவனத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.