ADDED : மார் 02, 2025 04:27 AM
அ நிறம் | அளவு
மதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவர் புல்லட் ஓட்டியதால் அக்கிராம இளைஞர்களால் தாக்கப்பட்டார்.
இதை கண்டித்து மதுரை நகரில் நேற்று முன்தினம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி பெற்று வி.சி.க., சார்பில் புல்லட் ஊர்வலம் நடந்தது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து பாதிப்பு உட்பட 3 பிரிவுகளின் கீழ் 170 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
