sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்லுாரி தின விழா

/

கல்லுாரி தின விழா

கல்லுாரி தின விழா

கல்லுாரி தின விழா


ADDED : மார் 15, 2025 05:40 AM

Google News

ADDED : மார் 15, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் 60ம் ஆண்டு விழா துணைத் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது. செயலாளர் சுந்தர் வரவேற்றார். நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் வாழ்த்தி பேசினார். முதல்வர் ராமமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற 294 மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் பி.ஏ.எம்.சி., மருத்துவமனை டாக்டர் புகழேந்தி பாண்டியன் பேசுகையில், 'மாணவர்கள் 'நா'வன்மை மிக்கவர்களாக திகழ வேண்டும். அதோடு கருத்தாழமும் வேண்டும்' என்றார்.

நடராஜ் ஆயில் மில்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் செந்தில்நாதன் பேசுகையில், 'இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்காமல் தொழில்முனைவோராக மாறி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.'என்றார். மாணவர்கள் கலைநிகழ்ச்சியை பேராசிரியர்கள் வினுப்பிரபா, பிரெட்ரிக் ஒருங்கிணைத்தனர். பொருளாளர் நல்லதம்பி நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகரன், முத்துராயர் ஏற்பாடுகளை செய்தனர். துணை முதல்வர் செல்வமலர், சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஸ்ரீதர், நாடார் மஹாஜன சங்க செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us