ADDED : ஜூலை 16, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை மற்றும் வணிகவியல் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் உலக இளைஞர் திறன்கள் தினத்தை முன்னிட்டு ‘மைண்ட் ஸ்பார்க் 2கே 2026’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல்வர் ராம சுப்பையா துவக்கி வைத்தார். மாணவி அக் ஷயா வரவேற்றார். 12 பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வினாடி வினா, வார்த்தை இணைப்பு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி சுஜிதபாலா நன்றி கூறினார்.
