ADDED : செப் 18, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காங்., எம்.பி., ராகுலை அவதுாறாக பேசியதாக பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜாவை கண்டித்து மதுரையில் நகர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் செய்யது பாபு, துரையரசன், மீர் பாட்ஷா, கவுன்சிலர்கள் முருகன், வி. முருகன், மாணவர் பிரிவு தலைவர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பாலு, ரவிச்சந்திரன், மகளிரணி நிர்வாகிகள் ஷானவாஸ், ராபியாத் பேகம் உள்பட பலர் பங்கேற்றனர்.