
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அ.செட்டியார்பட்டியில் பஞ்சமுக வாராஹி, உன்மத்த பைரவர் மற்றும் ராமதேவ சித்தர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 8 யாகசாலை பூஜை துவங்கியது.
நான்காம் கால யாகசலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது. பல ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, அழகர்கோவில் பகுதி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.