sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் ஜப்பான் அதிகாரி ஆய்வு

/

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் ஜப்பான் அதிகாரி ஆய்வு

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் ஜப்பான் அதிகாரி ஆய்வு

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் ஜப்பான் அதிகாரி ஆய்வு


ADDED : ஜூலை 31, 2024 04:35 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜப்பான் நாட்டு ஜெய்க்கா திட்ட கடனுதவியில் சமீபத்தில் கட்டப்பட்ட ஆறு மாடி அறுவை சிகிச்சை அரங்கம் செயல்படும் விதத்தை ஜெய்க்கா திட்ட முதுநிலை மேம்பாட்டு அலுவலர் அதிதி பூரி ஆய்வு செய்தார்.

ஜெய்க்கா திட்ட முகமையின் கடனுதவி மூலம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.321 கோடி மதிப்பீட்டில் ஆறுமாடி அறுவை சிகிச்சை அரங்க வளாகம் அமைக்கப்பட்டது. தற்போது முதல் மூன்று தளங்களில் நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதிய வளாகம் செயல்படும் விதத்தை திட்ட முதுநிலை மேம்பாட்டு அலுவலர் அதிதி பூரி ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், ''அறுவை சிகிச்சை அரங்குகளுக்கான தளங்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆறாவது தளத்தில் ஆசியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட உள்ள 'ஹைபிரிட்' அறுவை சிகிச்சை அரங்கு ஆக., இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

டீன் தர்மராஜ், மருத்துவ கண்காணிப்பாளர் குமாரவேல், ஆர்.எம்.ஓ., சரவணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஜெய்க்கா திட்ட நிர்வாகிகள், கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டனர். தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானத்தையும் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us