ADDED : ஜூன் 27, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
சொத்து வரி பெயர் மாற்றம், சொத்து வரி திருத்தம், காலிமனை வரி விதிப்பு, ரோடு, பாதாளச்சாக்கடை வசதி உட்பட 67 மனுக்கள் வரப்பெற்றன. சொத்து வரியில் பெயர் திருத்தம் தொடர்பான மனுவிற்கு உடன் தீர்வு அளிக்கப்பட்டது. முகாமில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, துணை கமிஷனர் தயாநிதி, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி கமிஷனர் கோபு, செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.