ADDED : மே 12, 2024 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தெப்பக்குளம் பகுதியில் தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநில பொதுச் செயலாளர் சொர்க்கம் ராஜா தலைமையில் நடந்தது.
தலைவர் சுரேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான், நுாருல்லா பிளாஸ்டிக்கின் பாதிப்பினை எடுத்துக்கூறி 20 தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசியுடன் மஞ்சப்பை வழங்கினர். செயலாளர் ராவியத் நன்றி கூறினார்.