sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தெருநாய்களை கட்டுப்படுத்த வழக்கு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

/

தெருநாய்களை கட்டுப்படுத்த வழக்கு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

தெருநாய்களை கட்டுப்படுத்த வழக்கு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

தெருநாய்களை கட்டுப்படுத்த வழக்கு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


ADDED : ஆக 09, 2024 02:41 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரையில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:

சாலைகள், வீதிகளில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மனிதர்களை கடிப்பதால் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. கேரளாவில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, 87,000 தெரு நாய்களுக்கு அம்மாநில அரசு, 2019ல் கருத்தடை செய்தது.

ரேபிஸ் நோய் வராமல் தடுக்க, 2020ல், சென்னையில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு அரசு செயல்படுத்தியது.

பொது இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், மத்திய கால்நடை, மீன்வளத்துறை செயலர், சுகாதாரத்துறை செயலர், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், சுகாதாரத்துறை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஆக., 29க்கு ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us