sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அங்கீகாரமற்ற கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

/

அங்கீகாரமற்ற கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

அங்கீகாரமற்ற கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

அங்கீகாரமற்ற கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை


ADDED : பிப் 22, 2025 10:26 PM

Google News

ADDED : பிப் 22, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தஞ்சாவூரில் அங்கீகாரமற்ற அடுக்குமாடி கட்டடத்தை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு ஆதன்கோட்டை லெனின் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு 1 தெற்கு தெருவில் அங்கீகாரமற்ற ஒரு தனியார் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. அதை ஆய்வு செய்து அகற்ற மாநகராட்சி கமிஷனர், உள்ளூர் திட்டக் குழுமம் (எல்.பி.ஏ.,) உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், வி.லட்சுமிநாராயணன் அமர்வு: பொதுநல நோக்கில் மனுதாரர் மனுவை தாக்கல் செய்துள்ளார். எல்.பி.ஏ.,விற்கு புகார் அளித்துள்ளார். கட்டுமான பணியை நிறுத்தவும், மேல்நடவடிக்கை தொடரப்படும் எனவும் எல்.பி.ஏ., நோட்டீஸ் அனுப்பியது. உறுதியான நடவடிக்கை இல்லாததால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை என மாநகராட்சி தரப்பு தெரிவித்தது.

முழு கட்டடமும் அங்கீகாரமின்றி கட்டப்பட்டுள்ளது. கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவரது தரப்பில் ஆஜராகவில்லை. அங்கீகாரமற்ற கட்டடத்தை முழுமையாக அகற்ற எல்.பி.ஏ.,விற்கு உத்தரவிடுவதை தவிர வேறு வழியில்லை. சட்டம்- ஒழுங்கு, போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட போலீசார் உறுதி செய்ய வேண்டும். இந்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் செல்வாக்கு செலுத்த யாரும் தொலைபேசி அழைப்பு மூலம் அல்லது வேறு வகையில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடாது.

இவ்விவகாரம் 2018 முதல் கிடப்பில் உள்ளதால் விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகளை கண்டறிந்து, ஒழுங்கு நடவடிக்கையை கலெக்டர் மேற்கொள்ள வேண்டும். கட்டடத்திற்கான மின் இணைப்பை உடனடியாக மின்வாரியம் துண்டிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us