ADDED : மே 16, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் விஷால், நரேன், பவன், திருமலை, காவியன், சோலேஷ், பார்த்தசாரதி, யோகேஷ் மேலுார் சூரக்குண்டு கிராமத்தில் பயிர் பாதுகாப்பு முறைகளை விளக்கினர்.
ஊரக வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ் அங்குள்ள விவசாயிகளுக்கு கோடைவெயிலின் தாக்கத்தில்இருந்து பயிர்களை பாதுகாப்பது, கோடை உழவு, தென்னை நார்க்கழிவைக் கொண்டு உழுதல், பொட்டாஷ் உரம் தெளித்தல், மண் மூடாக்கின் பயன்களை விளக்கினர்.