/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயன்பாட்டிற்கு வராத சுத்திகரிப்பு நிலையம்
/
பயன்பாட்டிற்கு வராத சுத்திகரிப்பு நிலையம்
ADDED : செப் 09, 2024 04:34 AM

வாடிப்பட்டி : மதுரை மேற்கு தொகுதி பரவை ஊர்மெச்சிகுளத்தில் 2019--20ம் ஆண்டு மந்தை பகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
சுத்திகரிப்பு நிலைய கட்டடத்தின் வெளியே இருந்த குழாய்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி அலட்சியத்தால் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் 4 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர்.
இன்று வரை இந்நிலையம் ஒரு குடம் தண்ணீர் கூட வழங்காத நிலையில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.