UPDATED : ஜூலை 22, 2026 08:49 PM
ADDED : ஜூலை 22, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் பி.எஸ்.என்.எல்.
அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் நுார்முகமது தலைமை வகித்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ததைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். நகர் தலைவர் மகாதேவன், வழக்கறிஞர் துரைபாண்டியன், செம்மனிபட்டி கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
