/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் தீக்குளித்த தி.மு.க. பிரமுகர் பலி
/
மதுரையில் தீக்குளித்த தி.மு.க. பிரமுகர் பலி
ADDED : ஆக 30, 2024 10:53 PM

மதுரை: மதுரையில் கட்சி நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளித்த தி.மு.க., பிரமுகர் கணேசன் 73, உயிரிழந்தார்.
மதுரை மானகிரியை சேர்ந்த இவர், நேற்று முன்தினம் காலை மூலக்கரையில் நகர் தி.மு.க., செயலாளர் தளபதியை அவரது வீட்டில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
பின் வெளியே வந்த அவர் வீடு அருகே மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரிடம் மாஜிஸ்திரேட், போலீஸ் தரப்பில் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.
தி.மு.க., வினர் கூறியதாவது: அவர் ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாலும் தி.மு.க., தொழிற் சங்க கவுரவ நிர்வாகியாக இருந்தார். தீக்குளிப்பதற்கு முன் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு கடிதங்கள் எழுதியுள்ளார்.
அதில் நிர்வாகிகள் சிலரை குறைகூறி பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் மீது நட வடிக்கை இல்லை என்ற மனஉளைச்சலில் தான் தற்கொலை செய்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு கட்சி தலைமை உத்தரவிட வேண்டும் என்றனர்.