sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

துார்ந்து போன கால்வாய்களில் மராமத்து பணி செய்யுங்க...

/

துார்ந்து போன கால்வாய்களில் மராமத்து பணி செய்யுங்க...

துார்ந்து போன கால்வாய்களில் மராமத்து பணி செய்யுங்க...

துார்ந்து போன கால்வாய்களில் மராமத்து பணி செய்யுங்க...


ADDED : ஜூன் 20, 2024 04:54 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் உள்ள கண்மாய், குளங்களுக்கான வரத்துக் கால்வாய்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தாலுகாவில் கண்மாய்கள், குளங்கள் அதிகம் உள்ளன. இவற்றில் பல நீர் நிலைகளுக்கு மழைக்காலத்தில் நீரைக் கொண்டு வரும் வரத்து கால்வாய்கள் புதர் மண்டியும், சேதமடைந்தும், துார்ந்து போயும் காணப்படுகின்றன. பல குளங்கள் துார்வாரப்படாமல் உள்ளன. இவற்றில் பல தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்தும் சீரமைக்கப்படாமல் உள்ளன. வாகனங்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் தடுப்புச் சுவர் உடைந்து விழ வாய்ப்பு உள்ளது. இதேபோல் துார்வாரப்படாத குளங்களை துார்வாரி சுத்தம் செய்வதன் மூலம் நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்கலாம். தண்ணீரை அதிகமாக தேக்குவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர் தட்டுப்பாட்டையும் தவிர்க்க முடியும். விவசாயக் கிணறுகளுக்கு நீர்வரத்து ஏற்படுவதன் மூலம் வேளாண் சிறக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் இத்தகைய கால்வாய்கள், ஓடைகள், குளங்களை கண்டறிந்து துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us