sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குஜராத்தில் இருந்து போதைப்பொருள்: சொல்கிறார் காங்., தலைவர்

/

குஜராத்தில் இருந்து போதைப்பொருள்: சொல்கிறார் காங்., தலைவர்

குஜராத்தில் இருந்து போதைப்பொருள்: சொல்கிறார் காங்., தலைவர்

குஜராத்தில் இருந்து போதைப்பொருள்: சொல்கிறார் காங்., தலைவர்

1


ADDED : ஜூலை 19, 2024 06:11 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 06:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம் : ''தமிழகத்திற்கு குஜராத்தில் இருந்து தான் போதை பொருள் வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து குஜராத்திலிருந்து போதைப்பொருள் வருவதை தமிழக கவர்னர் ரவி தடுக்க வேண்டும்,'' என, மதுரையில் காங்., மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மத்திய அரசின் உத்தரவு மற்றும் அழுத்தத்தினால்தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் முதல்வர் ஸ்டாலின் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

திருநெல்வேலி காங்., நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றியுள்ளார்கள். விரைவில் உண்மை வெளிவரும்.

ஓய்வு பெற்ற நீதிபதியைக்கூட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இந்த வெறுப்பு அரசியலை தமிழக மக்கள் என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காவிரி தண்ணீரை கொடுக்க வேண்டியது கர்நாடகா அரசின் கடமை. அவர்கள் மறுத்தால் மத்திய அரசு, பிரதமர் மோடி தலையிட்டு தான் பெற்று தர வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us