sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயில் அருகே கும்மாளமிடும் 'குடி'மகன்கள்

/

கோயில் அருகே கும்மாளமிடும் 'குடி'மகன்கள்

கோயில் அருகே கும்மாளமிடும் 'குடி'மகன்கள்

கோயில் அருகே கும்மாளமிடும் 'குடி'மகன்கள்


ADDED : ஜூன் 12, 2024 06:16 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : மேலுார் கஸ்துாரிபாய் நகரில் சிவன் கோயில் இடத்தில் குடிமகன்கள் தொந்தரவால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நகரின் 2 வது தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிவன் கோயில் பொட்டல் உள்ளது. இவ்விடத்தை சுற்றி வெற்றி விநாயகர் கோயில், ரேஷன் கடை, குடியிருப்புகள் உள்ளன. இதை குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: இவ்விடத்தில் இரவு, பகலாக குடிமகன்கள் மது, கஞ்சா உபயோகப்படுத்துகின்றனர். போதை தலைக்கேறிய நிலையில் அருவெறுக்க தகுந்த வார்த்தைகளால் பேசுகின்றனர். மது பாட்டில்களை நொறுக்குவதால் நடந்து செல்வோருக்கு காயம் ஏற்படுகிறது. இங்குள்ள வெற்றி விநாயகர் கோயிலுக்கு வருவதற்கே அச்சமாக உள்ளது.

மது அருந்த இடையூறாக இருப்பதாக கருதி தெருவிளக்குகளை உடைக்கின்றனர். சிவன் கோயிலில் அம்புவிடும் நிகழ்வு நடக்கும் இடத்தில் மது அருந்துவது வேதனையாக உள்ளது. ரேஷன் கடைக்கும் செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். மொத்தத்தில் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறோம் என்றனர்.






      Dinamalar
      Follow us