ADDED : ஏப் 19, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: துபாயில் கனமழையால்விமான நிலையத்திற்குள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அங்கிருந்து நேற்று முன்தினம் மதுரை வரவேண்டியவிமானம் ரத்து செய்யப்பட்டது.
அந்த விமானம்10 மணி நேரம் தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் மதுரையிலிருந்து துபாய் செல்ல இருந்த பயணிகள் விமான நிலையம், தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் துபாயில் இயல்பு நிலை திரும்பாததால் அந்த விமானம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
நேற்று காலையும் துபாயிலிருந்து மதுரை வர வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. துபாயில் நிலைமை சீரானபின் விமான சேவை துவங்கும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

