ADDED : மார் 29, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் அனைத்து துறை பணிநிறைவு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் சேவை மையத்தின் செயற்குழுக் கூட்டம் தலைவர் தமிழய்யா தலைமையில் நடந்தது. செயலாளர் துரைபாண்டியன் மாதாந்திர அறிக்கையும், பொருளாளர் ஆதிசிவன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். செயல் தலைவர் மணி தேர்தலில் உறுப்பினர்கள் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும். 85 வயது நிறைவு பெற்றவர்கள் வீட்டில் இருந்தே ஓட்டளிக்கலாம் என்பதை எடுத்துரைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசகர் பாண்டி, இணைச் செயலாளர் ஸ்ரீகண்டன் பங்கேற்றனர்.

