/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலி பீடிகட்டு: 3 பேர் மீது வழக்கு
/
போலி பீடிகட்டு: 3 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 18, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அப்பன்திருப்பதி : மதுரை டி.வி.எஸ்., நகர் முகமது அப்துல்லா. பிரபல பீடி நிறுவனத்தின் மதுரை கிளை மேலாளர்.
இவர்களது நிறுவனத்தின் பெயரில் போலியாக பீடி தயாரித்து மதுரை புறநகர் பகுதிகளில் சப்ளை செய்வதாக தகவல் கிடைத்தது.
அப்பன் திருப்பதி பகுதியில் கண்காணித்தபோது நரசிங்கத்தைச் சேர்ந்த நாகராஜ், போலி பீடிகளை சப்ளைசெய்ய வந்தபோது பிடித்து விசாரித்தனர். 6 மாதமாக மணிகண்டன், திருப்பதியுடன் இணைந்து விற்றது தெரிந்தது. அவரிடமிருந்து 142 பண்டல்கள், 200 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவர் மீது அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

