sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கார் மோதி தந்தை, மகள் பலி சென்னை இன்ஜினியர் கைது

/

கார் மோதி தந்தை, மகள் பலி சென்னை இன்ஜினியர் கைது

கார் மோதி தந்தை, மகள் பலி சென்னை இன்ஜினியர் கைது

கார் மோதி தந்தை, மகள் பலி சென்னை இன்ஜினியர் கைது


ADDED : செப் 08, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 08, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்திருமங்கலம், மம்சாபுரம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் துளசிநாதன், 33; மொபைல் போன் கோபுர பராமரிப்பு பணியாளர். இவரது மனைவி விஜயலட்சுமி, மகள் சஷ்டிகா, 6, மற்றும் 4 வயதில் மகன் உள்ளார்.

நேற்று காலை, ஒரே டூ - வீலரில் குடும்பத்துடன் மதுரை - சமயநல்லுார் நான்கு வழிச்சாலை திருமங்கலம் பைபாஸ் சாலையில் சென்றபோது, சில பொருட்களை வாங்குவதற்காக துளசிநாதன், சஷ்டிகா இருவரும் இறங்கி கொண்டனர்.

டூ - வீலரில் மகனுடன் விஜயலட்சுமியும் அவர்களின் புதிய வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். சர்வீஸ் சாலையில் தந்தை, மகள் நடந்து சென்றபோது, சென்னை ஐ.டி., நிறுவன ஊழியர் நாகர்கோவில் எத்தின் ஜோசப், 30, ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையில் இருந்து தடம் மாறி சர்வீஸ் சாலையில் சென்ற தந்தை, மகள் மீது மோதியதில், சஷ்டிகா சம்பவ இடத்திலேயே பலியானார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட துளசிநாதன் நேற்று மதியம் இறந்தார். எத்தின் ஜோசப்பை கைது செய்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 அதேபோல, சிவகங்கை மாவட்டம், வடவன்பட்டி ஜோதிமுத்து, 24; வெளிநாடு சென்று திரும்பியவர். நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு டூ - வீலரில் மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றார்.

நரசிங்கம்பட்டி பகுதியில் எதிரே தெற்குத்தெரு ஜெயராமன், 53, துாக்கிச் சென்ற இரும்பு கம்பி மீது மோதினார். இதில், ஜோதிமுத்து, ஜெயராமன் இறந்தனர். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us