/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் போடியை சேர்ந்த தந்தை, மகன் கைது
/
நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் போடியை சேர்ந்த தந்தை, மகன் கைது
நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் போடியை சேர்ந்த தந்தை, மகன் கைது
நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் போடியை சேர்ந்த தந்தை, மகன் கைது
ADDED : மே 28, 2024 03:34 AM
மதுரை : மதுரை நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் ரூ.பல கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது. இதன் இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 17 நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, ரூ.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுவரை நிறுவனத்திற்கு சொந்தமான 19 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.76 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரத்து 577.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பாபு 57, அவரது மகன் தனுைஷ 28, பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மணீஷா தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.
பாபு, நியோமேக்ஸ் தொடர்புடைய 3 நிறுவனங்களின் இயக்குநராக இருந்தவர். இவரது மகன் ஏஜென்ட் ஆக செயல்பட்டு வந்துள்ளார்.