ADDED : மே 09, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் உசிலை கால்பந்தாட்ட கழகம் சார்பில் இரண்டு நாள் ஐவர் கால்பந்துப் போட்டிகள் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடந்தது.
10, 12, 14, 15 வயதுக்கு உட்பட்ட நான்கு பிரிவுகளில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, பகுதிகளில் இருந்து 80 அணிகள் பங்கேற்றன.
உசிலை கால்பந்தாட்ட கழக தலைவர் வினோதன், செயலாளர் சுபாஷ், பொருளாளர் மணிகண்டன், பயிற்சியாளர்கள் பிரனாய்ட், சாம்கனி, ஒருங்கிணைப்பாளர் செந்தில்கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் அகஸ்தியர், சிவகுமார், யுவராஜா, செந்தில்குமார் போட்டிகளை நடத்தினர். இன்று இறுதி போட்டிகள் நடக்கிறது.