ADDED : ஆக 23, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உலக நாட்டுப்புறவியல் தினத்தை முன்னிட்டு மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் மாணவர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
முதல்வர் சாந்திதேவி தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் செல்வத்தரசி நாட்டுப்புறவியல் குறித்து பேசினார். ஆய்வாளர் சிந்து பங்கேற்றார். பேராசிரியர் அதிவீரபாண்டியன் நன்றி கூறினார். இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்புலட்சுமி ஏற்பாடு செய்தார்.