ADDED : ஜூன் 02, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இலவச சட்ட உதவி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பிரசாரம் தொடங்கப்பட்டது.
நீதிபதி பிரபாகரன் தொடங்கி வைத்தார். வக்கீல் சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி, இணை செயலாளர் விஜய், முத்துராஜா கலந்து கொண்டனர். மேலக்கோட்டை, கீழக்கோட்டை, கள்ளிக்குடி பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.