ADDED : ஜூன் 01, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அண்ணாநகரில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற கூட்டமைப்பு உரிமை மீட்பு சங்கம் சார்பில், இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடந்தது. மாநிலத் தலைவர் நாகபாஸ்கர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கருப்பையா முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெயராமன் வரவேற்றார்.
வழக்கறிஞர் தமிழ் அகிலன், சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான், நுாருல்லா 60 மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், அரிசி, மஞ்சப்பை வழங்கினர். ஊன்று கோல் அணி தலைவர் லோகேஷ் நன்றி கூறினார்.