ADDED : செப் 02, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூரில் நேற்று விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., துர்கா தேவி தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். பேரையூர், டி.கல்லுப்பட்டி, நாகையாபுரம், சத்திரப்பட்டி, வில்லுார், சாப்டூர், சேடப்பட்டி போலீசாரும், அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி நாளில் அமைதியாக, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டனர்.