ADDED : ஏப் 17, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி டி.எஸ்.பி., அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அலுவலக வளாகத்தில் சில வேப்ப மரங்கள் மட்டும் உள்ளன.
ஊட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் டி.எஸ்.பி.,யாக கடந்த மார்ச் 22ல் பொறுப்பேற்றார். கோடை வெப்பத்தை தணிக்க, அலுவலக வளாகத்தை பசுமையாக்க முடிவு செய்தார். ரோஜா, அரளி, குரோட்டன்ஸ் உள்ளிட்ட அலங்கார செடிகளை நட்டு போலீசார் ஒத்துழைப்புடன் பூந்தோட்டமாக மாற்றியுள்ளது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

