ADDED : மே 05, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு புற்றுநோயாளிகளுக்காக மதுரை வேலம்மாள் செவிலியர் பள்ளி மற்றும் கல்லுாரி, ப்ரீத்தி செவிலியர் கல்லுாரி செவிலியர்கள் கூந்தல் தானம் செய்த நிகழ்வு ஆசிய சாதனை, இந்திய சாதனை புத்தகங்களில் இடம்பெற்றது.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், கல்லூரி முதல்வர் ரேவதி, ப்ரீத்தி செவிலியர் கல்லுாரித் தலைவர் டாக்டர் சிவக்குமார், நிர்வாக இயக்குநர் டாக்டர் ஹேமா, முதல்வர் அருள்மொழி, செயற்குழு உறுப்பினர் சிவகாமி ஒருங்கிணைத்தனர். மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை செவிலியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கூந்தல் தானம் செய்தனர்.