ADDED : ஜூலை 18, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஊழல், லஞ்சத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடந்தது. தெற்கு தொகுதி 47வது வார்டு தெற்குவாசல் பகுதியில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நல்லமணி தலைமையில் பொதுமக்களிடம் நிர்வாகிகள் கையெழுத்து பெற்றனர்.
பொறுப்பாளர்கள் செய்யது பாபு, மலர் பாண்டியன், சுந்தர், அப்பாஸ் அலி, காசிராஜன், மோகனசுந்தரம், சுப்பிரமணியன் சிப்பாத்தலி, பஞ்சவர்ணம், சுஜாதா, முருகன், செல்வராஜ், அஷ்டலட்சுமி உட்பட மாவட்ட கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
