sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆசிரியர்கள் நியமன தேர்வு  உயர்நீதிமன்றம் தடை

/

ஆசிரியர்கள் நியமன தேர்வு  உயர்நீதிமன்றம் தடை

ஆசிரியர்கள் நியமன தேர்வு  உயர்நீதிமன்றம் தடை

ஆசிரியர்கள் நியமன தேர்வு  உயர்நீதிமன்றம் தடை


ADDED : ஜூன் 06, 2024 04:04 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வு இறுதி விடைகள் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஜனனி தாக்கல் செய்த மனு:

பி.ஏ., பி.எட்., முடித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமன தேர்விற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) 2023 அக்.25ல் வெளியிட்டது. விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்வு பிப்.4ல் நடந்தது. தற்காலிக (கீ) விடைகளை டி.ஆர்.பி.,வெளியிட்டது. அதில் சில தவறான பதில்கள் இடம் பெற்றன. ஆட்சேபனை தெரிவித்தோம். பரிசீலிக்கவில்லை. இறுதி (கீ) விடைகளை வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டனர். குழு அமைத்து இறுதி விடைகளை ஆய்வு செய்ய வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். தேர்வானோரின் இறுதி பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா: இறுதி விடைகள் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்க 2 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. டி.ஆர்.பி.,தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us