/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆறு மாதம் சும்மா இருந்தால் வாய்ப்பு; அ.தி.மு.க., தரப்பில் பன்னீர்செல்வத்துக்கு 'கிரீன் சிக்னல்'
/
ஆறு மாதம் சும்மா இருந்தால் வாய்ப்பு; அ.தி.மு.க., தரப்பில் பன்னீர்செல்வத்துக்கு 'கிரீன் சிக்னல்'
ஆறு மாதம் சும்மா இருந்தால் வாய்ப்பு; அ.தி.மு.க., தரப்பில் பன்னீர்செல்வத்துக்கு 'கிரீன் சிக்னல்'
ஆறு மாதம் சும்மா இருந்தால் வாய்ப்பு; அ.தி.மு.க., தரப்பில் பன்னீர்செல்வத்துக்கு 'கிரீன் சிக்னல்'
ADDED : பிப் 15, 2025 04:51 AM
மதுரை : ''நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஆறு மாதங்கள் அமைதியாக இருந்தால், அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்ப்பது குறித்து பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்'' என ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: பன்னீர்செல்வத்துக்கு செல்வாக்கு நன்றாக இருந்திருந்தால் அவரை பா.ஜ., தன் கட்சியில் இணைத்திருக்கும். செல்வாக்கை இழந்துள்ள அவர் 6 மாதம் அ.தி.மு.க.,விற்கு எந்த இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால் மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து பழனிசாமியிடம் பேசி நடவடிக்கை எடுப்போம்.
வழக்கு உள்ளிட்ட இடையூறுகளை பன்னீர்செல்வம் போன்றோர் அ.தி.மு.க.,வுக்கு இழைத்து வருவது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்தவர்கள் இதுபோன்று செயல்படுவது அழகல்ல என்றார்.
செல்லுார் ராஜூ திடீர் பாசம்
முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூவிடம் 'அ.தி.மு.க.,வில் இணைய தயாராக இருப்பதாக பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளாரே, செங்கோட்டையன் கருத்துக்கு தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளாரே' என நிருபர்கள் கேட்டதற்கு 'அண்ணன் பன்னீர்செல்வம், டி.டி.வி., சார் பேச்சுக்களுக்கு அவர்கள் தான் கருத்து கூற வேண்டும். அ.தி.மு.க.,வில் எந்த பிளவும் இல்லை. ஊடகங்கள் தான் ஊதி பெரிதாக்குகின்றன' என்றார். அ.தி.மு.க.,வில் இருந்து பன்னீர்செல்வம், தினகரனை நீக்கிய பிறகு இதுவரை அண்ணன், சார் என்று சொல்லாத செல்லுார் ராஜூ நேற்று மரியாதையாக அழைத்தது மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான புள்ளியா என பல யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
செல்லுார் ராஜூவின் திடீர் பாசம் குறித்து அவரிடம் நமது நிருபர் கேட்டபோது, ''தி.மு.க.,வில் உள்ளவர்களைகூட நான் மரியாதையாகதான் கூறுவேன். திடீர் பாசமெல்லாம் கிடையாது. இருவரையும் கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பொதுச்செயலாளரான பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது'' என்றார்.
செல்வாக்குமிக்கவர் விஜய்
தொடர்ந்து அவர் கூறியதாவது: செந்தில் பாலாஜி வழக்கில் அமைச்சராக தொடர விருப்பமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தி.மு.க.,வில் ஜாமின் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள். வழக்குகள் உள்ள அமைச்சர்களை கட்சி பணிக்கு ஸ்டாலின் மாற்ற வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது தவறு செய்த அ.தி.மு.க., அமைச்சர்கள் 10 பேரை ஒரே இரவில் அமைச்சரவையில் இருந்து நீக்கினார். வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் மீது ஸ்டாலின் சாட்டையை சுழற்றாமல் முதுகில் தட்டிக் கொடுத்து வருகிறார்.
விஜய் ஒரு பிரபலமான நடிகர். மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருக்கிறார்கள் என்றார்.

