/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மானாவாரியில் களை எடுக்கும் பணி தீவிரம்
/
மானாவாரியில் களை எடுக்கும் பணி தீவிரம்
ADDED : செப் 07, 2024 05:54 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் மானாவாரியில் பயிரிட்டுள்ள உளுந்து, பாசி, பருத்தி, துவரை, சோளம், கம்பு பயிர்களில் களையெடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மானாவாரி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு வறட்சியால் பயிர் கடுமையாக பாதித்து மகசூல் இல்லாமல் போனது.
கடந்த மாதம் பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி விதைப்பு பணிகளை முடித்தனர்.
தொடர்ந்து அவ்வப்போது பெய்த லேசான மழையால் செடிகள் செழித்து வளர்ந்து வருகிறது.
இத்தருணத்தில் களை எடுக்கும் வேலைகளை துவக்கியுள்ளனர்.
ஒரே நேரத்தில் இப்பணிகள் துவங்கியுள்ளதால் கூலியாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருந்த விவசாய தொழிலாளர்களுக்கு தற்போது வேலை கிடைப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.