ADDED : ஜூலை 12, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் நடந்தது.
இதில் நாவினிபட்டி ஊராட்சி தலைவி தவுலத்பீவி புகார் கொடுத்தார். அதில் நா.கோவில்பட்டி மற்றும் 6 வது வார்டு உள்ளிட்ட இரண்டு இடங்களில் மின்கம்பம் ஊன்றி தெருவிளக்கு அமைக்க கோரி ஊராட்சி சார்பில் 2023 அக்., 9 மின்வாரிய அலுவலகத்தில் ரூ.96 ஆயிரத்து 100 செலுத்தப்பட்டது. தெருவிளக்குகள் அமைக்கவில்லை.
பொருட்கள் இல்லை என அலைக்கழிக்கின்றனர். டிரான்ஸ்பார்மர் மாற்றக்கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
செயற்பொறியாளர் கண்ணன் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

