ADDED : மே 28, 2024 03:38 AM
கருப்பாயூரணி : மதுரை ஆண்டார்கொட்டாரம், பிள்ளையேந்தலை சேர்ந்தவர் போஸ் மகன் முத்துக்குமார் 29. இவரும் சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த பவித்ராவும் 24, காதலர்கள். பெற்றோர் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்காக காத்திருந்தனர்.
பவித்ரா தோழியின் திருமணம் சிவகங்கையில் நடந்தது. இதில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து வந்த பவித்ரா முத்துக்குமாருடன் பைக்கில் சிவகங்கைக்கு (ெஹல்மெட் அணியவில்லை) சென்றார். திரும்பி வரும் போது நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் உறங்கான்பட்டி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே பவித்ரா உயிரிழந்தார். முத்துக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கருப்பாயூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.