ADDED : மே 14, 2024 06:18 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் சார்பில், திங்கள் தோறும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு மதிய உணவு வினியோகிக்கின்றனர்.
நேற்று சங்கத் தலைவர் பூபதி, துணைத் தலைவர் நாகலட்சுமி, பொருளாளர் சிவக்குமார், தேசிய மாற்றுத்திறனாளிகள் இளைஞர் மன்றதலைவர் முத்துமகேஸ்வரன் முன்னிலையில் திண்டியூர் ஊராட்சி தலைவர் லட்சுமி, வரிச்சியூர் தலைவர் சரவணன் மதிய உணவு வழங்கினர்.
பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன், நாகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தனர்.
