ADDED : ஜூலை 30, 2024 02:04 AM
மதுரை : மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 'அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்' என்ற தலைப்பில் சிந்தனை கவியரங்கம் நடந்தது. பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம், துணைச் செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்தனர். இரா. வரதராஜன் எழுதிய 'இலக்கிய சிந்தனைகள்' கவிதை நுால் வெளியிடப்பட்டது. கவிஞர்கள் கங்காதரன், முருகபாரதி, பொன் பாண்டி, லிங்கம்மாள், இதயத்துல்லா, அழகையா, ஆறுமுகம்,அஞ்சூரியா, ஜெயராமன், சமயக்கண்ணு, நாகவள்ளி, பழனி, முனியாண்டி, வேல்பாண்டி, பறம்பு நடராஜன், சாந்தி ஆகியோர் கவிதை பாடினர்.
நிறுவனர் வீரபாண்டியத் தென்னவன் சார்பில் மகன் ஆதி சிவம், சிறப்பாக கவிதை பாடிய கங்காதரன், அழகையா, இதயத்துல்லா ஆகியோருக்கு விருது வழங்கினார். பார்வையாளர்களாக அதிவீரபாண்டியன், செல்லத்துரை, சண்முகம், ஜெகதீசன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.