/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மலேசியாவில் சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற சகோதரர்கள்
/
மலேசியாவில் சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற சகோதரர்கள்
மலேசியாவில் சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற சகோதரர்கள்
மலேசியாவில் சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற சகோதரர்கள்
UPDATED : ஜூன் 01, 2024 07:04 AM
ADDED : ஜூன் 01, 2024 05:06 AM

மதுரை: மலேசியா சிலம்ப கழகம் மற்றும் இன்டர்நேஷனல் சிலம்பம் பெடரேஷன் இணைந்து நடத்திய சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் மதுரை கேரன் மெட்ரிக் பள்ளியில் பயிலும் சகோதரர்கள் பதக்கங்களை வென்றனர்.
மலேசியாவில் கடந்த மே 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் மலேசியா சிலம்ப கழகம் மற்றும் இன்டர்நேஷனல் சிலம்பம் பெடரேஷன் இணைந்து, ‛சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகள்-2024' நடத்தின. இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் பலர் கலந்து கொண்ட இப்போட்டிகளில், மதுரையில் இருந்து ராஜ மகா குரு ஆசான் ராமகிருஷ்ணன் மற்றும் சேது லட்சுமி ஆகியோர் தலைமையிலான விராட்டிபத்து ஸ்ரீ மாருதி சிலம்பப் பள்ளி மட்டுமே தேர்வானது.
இதில், தனித்திறமை, ஒற்றை அலங்காரம் போன்ற பல பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 10 முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் பல்கலைநகர் பகுதியை சேர்ந்த உதயா, ஒற்றை அலங்கார பிரிவில் தங்கப்பதக்கத்தையும், தனித்திறமை பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார், அவரது மூத்த சகோதரரான தயா, தனித்திறமையில் வெள்ளிப்பதக்கத்தையும், ஒற்றை அலங்கார பிரிவில் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.
சகோதரர்களான இருவரும் இதுவரை மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச சிலம்பம் போட்டிக்காக தயாராகிவந்த நிலையில், மலேசியாவில் பதக்கங்களை வென்று வந்ததற்கு பயிற்சி பள்ளி ஆசான்கள், அவர்கள் படித்துவரும் கேரன் மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள், பல்கலைநகர் ஊர் மக்கள் அனைவரும் தயா, உதயாவை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.