sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு ரூ.5 கோடியில் நவீன ஓய்வு அறை

/

மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு ரூ.5 கோடியில் நவீன ஓய்வு அறை

மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு ரூ.5 கோடியில் நவீன ஓய்வு அறை

மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு ரூ.5 கோடியில் நவீன ஓய்வு அறை


ADDED : மே 13, 2024 06:42 AM

Google News

ADDED : மே 13, 2024 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் ரயில் ஓட்டுநர்கள் தங்கி ஓய்வு எடுக்க வசதியாக புதிய நவீன ஓய்வு அறை ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

லோகோ பைலட்டுகள், உதவி லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் ரயில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் 'ஓடும் தொழிலாளர்கள்' என அழைக்கப்படுகின்றனர். இரவு பகல் என தொடர்ந்து தொலைதுார ரயில்வே ஸ்டேஷன்களுக்கு ரயில்களை இயக்கும் இவர்களுக்கு முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் மதுரை ரயில்வே காலனியில் ரூ. 5 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதிய ஓய்வு விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த ஓய்வு விடுதிக்கு ரயில் மரம் - ஓடும் தொழிலாளர்கள் கூடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஓடும் தொழிலாளர்களுக்கு ஒருவருக்கு ஒரு அறை என்ற வகையில் 40 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் குளிர்சாதன வசதி, கட்டில் - மெத்தை, மின்விளக்குகள், மின் விசிறி, மேஜை, நாற்காலி, உடைமைகளை வைக்க தனி மேஜை, படிப்பதற்கான தனிமின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பெண் லோகோ பைலட்டுகளுக்கு இரண்டு மூன்று பேர் சேர்ந்து தங்கி ஓய்வெடுக்க வசதியாக தனிஅறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நவீன விடுதியில் சமையலறை, உணவு அருந்தும் அறை, புத்தகங்கள் படிக்கும் அறை, யோகா மற்றும் தியான அறை, உடற்பயிற்சி கூட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெளிவளாகப் பகுதியில் நடைப்பயிற்சிக்கு பசுமை பூங்கா, இருக்கைகள் உள்ளன. இயற்கை வெளிச்சம், காற்றோட்டம் இருக்கும் வகையில் விடுதி கட்டப்பட்டுள்ளது.

இந்த விடுதி, ஓடும் தொழிலாளர்கள் பணிமுடிந்ததும், ஓய்வெடுத்து மீண்டும் உற்சாகமாக ரயில்களை இயக்க உதவும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us