நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளியில் ஆழ்வார்புரம் வைகை வடகரை அப்துல் கலாம் நண்பர்கள் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு கோடைகால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
தலைமையாசிரியை மணிமேகலை தலைமை வகித்தார். 'சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்' என்ற தலைப்பில் ஆசிரியை சுலைகாபானு பேசினார்.
உடற்கல்வி ஆசிரியர் காட்வின் பேச்சு பயிற்சி அளித்தார். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நண்பர்கள் அமைப்பு நிறுவன தலைவர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.