ADDED : ஏப் 25, 2024 04:00 AM
அ நிறம் | அளவு
மதுரை, : மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செய்த பண மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இதுவரை அதன் தலைமை இயக்குனர்கள் மூவர் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். 17 கிளை நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
நேற்று இவ்வழக்கில் கிளை நிறுவனங்களான டிரான்ஸ்கோ ப்ராப்பர்டீஸ் இயக்குனர்கள் சார்லஸ், இளையராஜா, அஸ்ட்ரானியா ப்ராப்பர்டீஸ் நிறுவன இயக்குனர் ராஜ்குமார், சென்ட்ரியோ ப்ராப்பர்டீஸ் நிறுவன இயக்குனர் சஞ்சீவ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
