நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: தோப்பூர் அரசு நெஞ்சக மற்றும் தொற்று நோய் மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டப்பட்டது.
செவிலியர் கண்காணிப்பாளர் கனகாம்பாள் தலைமை வகித்தார். செவிலியர்கள் ஜான்சிராணி, பாத்திமா, ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர். பிரசில்லா தனலட்சுமி வரவேற்றார். செவிலியர் கோமதி பேசினார். மரக்கன்றுகள் நடப்பட்டன.
தலைமை மருத்துவர் காந்திமதிநாதன், டாக்டர்கள் ஜெய்கணேஷ், இளம்பரிதி, சுதாமதி, மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சி நடந்தது. செவிலியர் சுதா நன்றி கூறினார்.

