/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் ரூ. 64 லட்சம் உண்டியல் வருமானம்
/
குன்றத்தில் ரூ. 64 லட்சம் உண்டியல் வருமானம்
ADDED : செப் 03, 2024 05:47 AM
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் நேற்று கோயில் துணை கமிஷனர் சுரேஷ், கூடலழகர் பெருமாள் கோயில் உதவி கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, அறநிலையத்துறை ஆய்வர் இளவரசி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. 64 லட்சத்து 8 ஆயிரத்து 449, தங்கம் 146 கிராம், வெள்ளி 3 ஆயிரத்து 740 கிராம் இருந்தது.
கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலய வேதபாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பேரவையினர், அருள்மிகுஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவியர், அன்னபூர்ண சேவை ஊழியர்கள் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.