ADDED : மே 06, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத் தெரு கோதண்டராமர் கோயில் அருகில், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் வீரவாஞ்சிநாதன் கிளை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. மீனாட்சி பட்டாபிராமன் திறந்து வைத்தார்.
மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் ஆலோசனைப்படி, கோடை வெயிலை முன்னிட்டு மே மாதம் முழுவதும் காலை 10:30 முதல் மதியம் 3:00 மணி வரை பொதுமக்களுக்கு நீர்மோர், தண்ணீர், ஜூஸ் உள்ளிட்டவை வழங்கப்படும். கிளை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.