sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஊர்மெச்சிகுளத்தில் பஸ்ஸ்டாப் கட்ட எதிர்ப்பு

/

ஊர்மெச்சிகுளத்தில் பஸ்ஸ்டாப் கட்ட எதிர்ப்பு

ஊர்மெச்சிகுளத்தில் பஸ்ஸ்டாப் கட்ட எதிர்ப்பு

ஊர்மெச்சிகுளத்தில் பஸ்ஸ்டாப் கட்ட எதிர்ப்பு


ADDED : ஆக 08, 2024 05:09 AM

Google News

ADDED : ஆக 08, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி ஊர்மெச்சிகுளத்தில் மாநகராட்சி குடிநீர் பைப் லைன் மீது பஸ் ஸ்டாப் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மெயின் ரோட்டில் ஊர்மெச்சிகுளம் பிரிவில் கடந்த பிப்ரவரியில் ரூ.20 லட்சத்தில் பஸ்ஸ்டாப் கட்ட பூமி பூஜை நடந்தது. இதற்காக 30 வயது நிழல் தரும் மரத்தின் கிளைகளை வெட்டினர். கட்டுமானத்திற்கு பில்லர் அமைக்க தோண்டிய குழிகளில் 4ல் பரவை பேரூராட்சி குடிநீர் குழாயும், 4ல் மாநகராட்சி குடிநீர் மெகா சைஸ் பைப் லைனும் செல்கிறது.

இதில் பேரூராட்சி குழாயை மாற்றி அமைத்துள்ளனர். மாநகராட்சி பைப் லைனில் பழுது ஏற்பட்டால் பஸ் ஸ்டாப்பை இடித்து பழுது நீக்கும் நிலை ஏற்படும். இதன் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. எனவே பஸ் ஸ்டாப் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பாலமுருகன் என்பவர் கூறுகையில், ''இந்த இடத்தில் ரூ.4.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட சில்வர் பஸ் ஸ்டாப், சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. அது என்ன ஆனது எனத் தெரியவில்லை. மரத்தை வெட்டாமல் சிறிய அளவில் பஸ் ஸ்டாப் போதுமானது. அல்லது வேறு இடத்தில் பஸ் ஸ்டாப் கட்ட வேண்டும் என மனு அளித்துள்ளேன் என்றார்.






      Dinamalar
      Follow us