ADDED : ஜூலை 30, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சாத்தங்குடி ஊராட்சி புல்லமுத்துார், போல்நாயக்கம்பட்டி, புலியூர் பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் விவசாய வேலைகளுக்கும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இக்கிராமங்களில் பணித்தள பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வேலையை பகிர்ந்து அளிக்காமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வேலை வழங்குவதை கண்டித்து நேற்று நுாற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.