/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தக்கைப் பூண்டு வளர்ப்பில் பேரையூர் விவசாயிகள் ஆர்வம்
/
தக்கைப் பூண்டு வளர்ப்பில் பேரையூர் விவசாயிகள் ஆர்வம்
தக்கைப் பூண்டு வளர்ப்பில் பேரையூர் விவசாயிகள் ஆர்வம்
தக்கைப் பூண்டு வளர்ப்பில் பேரையூர் விவசாயிகள் ஆர்வம்
ADDED : செப் 12, 2024 04:59 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் இயற்கை உரத்திற்காக தக்கைப் பூண்டு செடி வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பயிர் சாகுபடியில் விவசாயிகள் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களை பயன்படுத்தினர். இதனால் நிலங்களில் மண்ணின் வளம் குறைந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் விவசாய பயிர்களின் வளர்ச்சி குறைந்தது. தற்போது மண்ணின் தன்மையை வளப்படுத்தும் வகையில் இயற்கை உரங்களுக்கு மாறி வருகின்றனர்.
இயற்கை உரங்களை பயன்படுத்தும் வகையில் தக்கைப் பூண்டு விதைகளை துாவி வளர்த்தனர். நன்கு வளர்ந்த நிலையில் தக்கைப் பூண்டு செடிகளை உழுது அதே நிலத்தில் உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
சூரிய ஒளி மூலம் செடிகளின் வேருக்கு நைட்ரஜன், புரோட்டீன் சத்தும் கிடைத்து வருகிறது.
மண்ணின் தன்மை மாறாமல் மண்புழுக்கள் இறக்காமல், உரமாகவும், தளைச் சத்தாகவும் பயன்படுகிறது. இதோடு கால்நடைகளுக்கு சத்தான தீவனமாகவும் பயன்படுகின்றன. இதனால் விவசாயிகள் தற்போது தக்கைப் பூண்டு செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.